வாசமுல்லை பொன் மகளே
கரையோரம் பூத்திருக்கும் கண்கவரும் செண்பகப்பூ!
மலையோரம் மலர்ந்திருக்கும் மனசினிக்கும் மல்லிகைப்பூ!
எங்கள் வீட்டு மகராசி தினம் இனிக்கும் புன்னகைப் பூ!
வரமாக வந்து நிக்கும் எங்க வீட்டு சந்திரனே!
வானுயர்ந்த பாதையில பாடி வரவேணும் நீயே!
வற்றாத பாசத்திலே காத்திருக்கும் எம் உசுரே!
வாசமுல்லை மா மலரே!
வாழவேணும் பொன்மலரே!
Comments
Post a Comment