வாழ்க மகளே
அது என்ன புன்னகை? அன்பை வாரி வழங்கும் புன்னகை ! இது என்ன மாயம்? இயல்பாய் பழகும் இத்தனை பண்புகள் ! அது என்ன புதுமொழி? பாசத்தின் வழி மொழி! இது என்ன உள்ளம்? எவரையும் உடனே ஈர்க்கும் வெள்ளம் ! வாழ்க எம் மகளே! வளர்ந்து அழகாய்; நிமிர்ந்து வளமாய்; வாழ்ந்திடும் எங்கள் காவிரியே! வாழ்க! வாழ்க!