ஆயினும் காவேரி
தேடிவரும்; ஓடிவரும்;
தெம்மாங்கு பாடி வரும்;
ஆடியிலே பெருக்கெடுத்து
காவேரி ஓடிவரும் !
கூடிவரும் சொந்தமெல்லாம்
நாடி வரும் உன் கரைக்கே;
கொண்டாடி குளித்திருக்க!
குறையின்றி வாழ்ந்திருக்க!
நாயகியே! காவேரி!
நாளெல்லாம் காக்க வேணும் !
நாடெல்லாம் நலமாக;
நல்ல விதை தான் முளைக்க;
நீரால சீராட்டி நீ யென்றும்
காக்க வேணும் ;
தாயே எம் காவேரி ;
வாழ வைக்க வேண்டும் அம்மா !
Comments
Post a Comment