யதுகுல கண்ணனே
யதுகுல திலகனே வருவாய்; எங்கள் இல்லத்தில் அமைதியை தருவாய்!
கண்ணா! நீ! இல்லத்தில் அமைதியை தருவாய்!
போர்கண்ட நாட்கள் போதும்; உன்
புன்னகை பூமழை வேண்டும்!
கண்ணா உன் ! புன்னகை பூமழை வேண்டும் !
பெற்றவள் உற்றவள் பேதமில்லாமல் ;
பேய்மகள் நஞ்சுண்டு அச்சமில்லாமல்;
கொஞ்சிடும் தாயின் மடியும் கொள்ளாமல் ;
கோபியர் மயங்கிட கொஞ்சம் நில்லாமல் ;
ஓடிடும் கண்ணனே! வா எங்கள் முன்னே!
நாடிடும் வெண்ணெய் நான் கொண்டு தருவேன்;
ஊர் கண்டு மகிழ்ந்திட தேர் கொண்டு வருவேன்
வாய் கொண்ட மண்ணில் வையகம் காட்டும்
வான் கொண்ட நிறமதின் தேன் தரும் மழையே
வா எங்கள் கண்ணனே! வாசலின் முன்னே!
Comments
Post a Comment