வாழ்க நீ சின்னவளே

கண்ணுல குறும்போட; 

கையில் கரும்போட; 

கற்கண்டு தேனோட;

வந்தாளே செல்லமக! 

வாசமுல்லை சின்னமக!


கைபிடிச்ச கரும்பாட்டம்; 

வாழ்வினிக்கும் தேனாட்டம்; 

ஊர் மெச்சும் உன்னாட்டம்;

எங்களுக்கு கொண்டாட்டம்!


கைபிடிக்கும் காவிரியே; 

கால் நனைக்கும் கடலையே;

வாழவைக்கும் வான்மழையே;

வாசலிலே பூ மழையே!


வாழ்க எம் சின்னவளே!

வான் புகழ என்னவளே!

தாய் தகப்பன் மனசாட்டம்!

தாங்கி நிக்கும் உசுராட்டம்!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்