நீல வண்ணனே ராமா
நீலமேக வண்ணத்திலே;
நெஞ்சில் இனித்திடும் ராகத்திலே;
நிலவின் குளிராய் இதயத்திலே ;
நீ இறங்கி வந்தாய் எம் நிலத்தினிலே!
வானத்தில் புதிதாய் ஒரு தோற்றம் ;
வண்ணப் பூக்களின் ஜதியாட்டம் ;
வாரி அணைத்திட ஒரு கூட்டம் ;
வந்தாய் நீயும் புன லாட்டம்!
வில்லை ஏந்திடும் கரங்களிலே ;
சொல்லை ஏந்திடும் இதயத்திலே;
அன்புடன் கரையும் பாசத்திலே;
அண்ணல் ராமனே நாமத்திலே !
காத்தாய் முனிவரை ஒரு காலம்;
காதல் வாழ்வில் ஒரு ஜாலம்;
கானகம் சென்றாய் சில காலம்;
கற்றோம் உன்னிடம் பல காலம் !
இல்லறம் காட்டிய நல்லறமே ;
இதயம் தேடும் உன் அறமே;
அனுமனை அணைத்திட்ட அருட் கரமே;
அகிலம் காத்திடும் உன் வரமே!
ராம ராம ராம ராம ராம ராம ராம்!
ராம சீதா ராம சீதா ராம சீதா ராம்!
Comments
Post a Comment