ஏழுமலையான்

 வண்ண மலர் மாலையப்பா

வானம் தொடும் தோற்றமப்பா ;


கண்கள் கண்ட நேரமப்பா

கவலை இனி இல்லையப்பா!


பொன் அளக்கும் சீனிவாசா;

புவி அளந்த வரதராஜா;

மண் அளந்த வாமன ரூபா;

விண் அளந்த விஸ்வ ரூபா!


கால் நடந்து ஏழுமலை;

காண வந்தோம் நீயே துணை!

ஊண் மறந்து ஏங்கி நின்றோம்;

உடன் இருந்து காப்பாய் என்றும்!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்