ஆதிசிவன் அற்புதமே
அடடா! அடடா! அற்புதமே! ஆதிசிவன் மடி அற்புதமே!
காதில் சொல்பவன் அற்புதமே !
கார்த்திகேயன் அவன் அற்புதமே!
வாரி அனைத்திடும் வானவன் கரங்கள் ;
பாசம் காட்டிடும் பரமனின் கண்கள் !
மடியேறி அமர்ந்திடும் மழலை முருகன்;
மந்திரம் சொல்லி தந்திடும் தலைவன் !
சொல்வதை அன்புடன் ஏற்றிடும் ஈசன்;
சொல்லி தந்தவன் சுவாமி நாதன்!
நல்லதை ஏற்க நாடகம் புரிந்தவன்;
நமசிவாயனே நம்மை காப்பவன்!
அற்புதம்! அற்புதம்! அற்புதமே !
ஆதிசிவன் என்றும் அதிசயமே!
Comments
Post a Comment