வாழ்க மகனே
வாழ்க நீ எம் மகனே;
வாழ்க! வாழ்க!
களைப் பறியா காவிரியே;
கை குலுக்கும் புன்னகையே;
உடன் நடந்து உறவாடும்
உற்சாகப் பூ மழையே!
கடல் கடந்து சென்றாலும்
கரை மீண்டு வந்தாலும்;
மலை கண்ட புகழோடு
நிலை கொண்ட அன்போடு;
நேரிழையாள் துணையோடு;
நெஞ்சினிக்க மகனோடு' மகளோடு;
மண் மயங்கி பாராட்ட!
விண் இறங்கி சீராட்ட!
வாழ்வாய்! நீ எம் உயிரே!
வாங்கலம்மன் அருளாளே!
Comments
Post a Comment