வேலன் வரவு
ஆறுபடை வீரன் காப்பு;
அதுவே வேண்டிடும் நோன்பு!
செந்தில் வேலன் வரவு;
செந்நெல் தந்திடும் உணவு!
நீல கடலதன் தாலாட்டு;
நெஞ்சில் இனித்திடும் ஓர் பாட்டு!
கையில் வேலுடன் விளையாட்டு;
காத்திட புறப்படும் உனைப் பார்த்து!
கால்கள் கடந்து வந்திடுமே;
கண்கள் இமைக்க மறந்திடுமே!
கந்தன் கூர்வேல் காத்திடுமே;
கனவுகள் நனவில் மலர்ந்திடுமே!
Comments
Post a Comment