வாழ்க மருமகளே

 கால் தடம் கொண்ட காவிரி ஆறு;

கணவன் குழந்தைகள் நீ கொண்ட பேறு!


சற்றே வானம் சாய்ந்தே வாழ்த்த;

சந்தியில் நிலா அது புன்னகை பூக்க!


வாழ்வாய் என்றும் வளம் தரும் நிலமாய்;

வற்றா ஊற்றாய் உளம் பொங்கும் அன்பாய்;


வாழ்ந்திடும் இல்லத்தின் வான் தந்த மழையாய்;

வாழ்வாய் சிறப்பாய்; வாழ்வதில் நிறைவாய்!


வாழ்க! நலமுடன்! வாங்கல் அம்மன் அருளால்.  Happy birthday Anitha

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்