குரு ராகவேந்திர
புல்லாங் குழலால் மயக்கும் ஒருவன்;
புன்னகை அம்பால் வீழ்த்தும் ஒருவன்;
சிங்க முகந்தினில் சீறும் ஒருவன்;
சேர்ந்தே அருளும் ஞானத் தலைவன்!
குரு ராகவேந்திர என்னும் ஒருவன்!
கண்ணின் கீதையை கவிதையாய் தந்தான்;
மூல ராமனை நெஞ்சில் வைத்தான்;
சிங்கமுகனின் பக்தனின் இருப்பிடம்' சேர்ந்தே அமர்ந்தான்;
மந்தி ராலய மண்ணில் வாழ்ந்தான்
துங்கபத்திரை ஆற்றின் கரையில்;
துன்பம் தீர்க்கவே தன்னைத் தந்தான்!
அருள்வாய் குருவே! அன்பின் வடிவே!
யாரிங்கு உள்ளார்?
எமக்கே இங்கே?
குருவே சரணம்! குருவே சரணம்!
கூடும் உறவுடன் உன்னிடம் சரணம் !
Comments
Post a Comment