ஆரம்பம் கணபதி

 ஆரம்பம் ஆரம்பம் உன்னாலே ;

ஆனந்தம் ஆனந்தம் தன்னாலே !


தடைகள் நீங்கி மடை போல் வெள்ளம் பாய்ந்திடும் நிலமதில் உன்னாலே;


பாய்ந்திடும் நீரதில் வாழ்ந்திடும் பயிர்கள் வாழ்வினை தந்திடும் தன்னாலே !


அன்னையின் கரங்கள் ஆயிரம் பொன்கள் அள்ளியே தந்திடும் உன்னாலே ;


ஆயிரம் தாமரை மலர்களின் மேலே அன்னையின் வாசம்  முன்னாலே !


ஏந்திடும் கைகள் இனிப்புகள் தந்து வாழ்ந்திடும் எம்மை தன்னாலே ;


என்றுமே என்றுமே எங்கள் வாழ்வதில் வாழ்ந்திடும் தெய்வம் நீ தானே !


நீதானே என்றும் நீதானே எங்கள் லட்சுமி கணபதி நீதானே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்