வையம் காத்திடும் வைத்தீஸ்வரன்

 உப்பும் மிளகும் உன் அருள் நீரில் ஒன்றாய் கரைத்து; எம் நலம் வேண்டி பாடி நின்றோம்


கண் மலர் திறந்து காத்திடும் தையல் நாயகி; முன் கரம் ஏந்தி நின்றோம்


வையம் வாழ்ந்திட வாழ்வது செழித்திட;

வைத்திய நாதன் அருள் வேண்டி நின்றோம்


வான் தரும் மழைபோல்; மண் தரும் பயிர் போல்; மங்கையின் துணையுடன் காப்பவனே!


வளம் கொண்ட நிலமது' வளர்த்திடும் பயிராய்; வாழ்வதை காத்திடும் வைத்தியனே!


வாழ்ந்திடும் நாளில் '

வாடா முகத்துடன் வந்துனை பாடுவோம் வைத்தியனே!


வைத்தியனே எங்கள் வைத்தீஸ்வரனே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்