காதலாகி எம் ஈசா
காதலாகி கசிந்து கண்ணிமை மூடி
கரம் பிடித்து;
கனவுகள் தாங்கி;
கண் கொள்ளா காட்சியாய் !
கண்முன்னே நின்றாய் நீ எம் ஈசா! அம்மையுடன்!
உம் கண்காட்டும் கருணையினால் எம் மக்கள்
கங்கையாய் காவிரியாய் வற்றாத வளம் காட்டும் புன்னகையாய்
ஒன்றாகி வாழ்வதற்கு அருள்வாய் நீ எம் ஈசா! இந்நாளில் கண்விழித்தே!
Comments
Post a Comment