கல்யாண சுந்தரன்
படையோடு வருகிறான் பாருங்கள் !
பரமேஸ்வரன் புகழ் பாடுங்கள்!
காளை மீதவன் ஊர்கோலம்;
கல்யாண சுந்தர திருக்கோலம் !
பாருங்கள் வந்து பாருங்கள்;
பரமேஸ்வரன் புகழ் பாடுங்கள் !
சூரிய பந்தை உதைத்தவள் அன்னை ;
பூமியில் பசுவாய் பிறந்தாள் பின்னை!
காளை மீதிலே சென்றான் காளை ;
கன்னி பசுவின் கல்யாண மாலை!
அண்ணன் மாலன் அருகில் நாரதன் ;
ஆயிரம் தேவர் அழைத்து சென்றிட !
அன்னையை மணந்தான் கல்யாண சுந்தரன்; அருள்வான் நமக்கே ஆலால கண்டன்!
கண்களில் வாழும் காட்சியின் செல்வன்; காப்பான் நம்மை கல்யாண சுந்தரன் !
Comments
Post a Comment