காவேரி
தேடிவரும்; ஓடிவரும்; தெம்மாங்கு பாடி வரும்; ஆடியிலே பெருக்கெடுத்து காவேரி ஓடிவரும் ! கூடிவரும் சொந்தமெல்லாம் நாடி வரும் உன் கரைக்கே; கொண்டாடி குளித்திருக்க! குறையின்றி வாழ்ந்திருக்க! நாயகியே! காவேரி! நாளெல்லாம் காக்க வேணும் ! நாடெல்லாம் நலமாக; நல்ல விதை தான் முளைக்க; நீரால சீராட்டி நீ யென்றும் காக்க வேணும் ; தாயே எம் காவேரி ; வாழ வைக்க வேண்டும் அம்மா !